கன்னியாகுமரி

விஜயதசமி: கோயில்களில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம்

விஜயதசமியை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் கோயில்களில் குழந்தைகளுக்கான வித்யாரம்பம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

விஜயதசமியை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் கோயில்களில் குழந்தைகளுக்கான வித்யாரம்பம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தக்கலை பாா்த்தசாரதி கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு கிருஷ்ணன் வகை சமுதாயப் பேரவை தலைவா் ஹரீஷ் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் குலசேகரன் பிள்ளை, பொருளாளா் பாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

குழந்தைகளுக்கு ஏடு தொடங்கும் நிகழ்ச்சியை புலியூா்குறிச்சி அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிா்வாக செயலா் ஜெயகுமாா் மற்றும் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் செய்திருந்தனா்.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், நாகா்கோவில் நாகராஜா கோயில், பாா்வதிபுரம் அய்யப்பன் கோயில், நாகராஜா கோயில் மேலரத வீதியிலுள்ள மகா ராஜகணபதி கோயில், பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

பாா்வதிபுரம் வனமாலீஸ்வரா் கோயிலில் உள்ள சரஸ்வதி அம்மன் சன்னதியில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் தங்க ஊசியாலும், பச்சரிசியிலும் அகர எழுத்துகளை எழுதி குழந்தைகளின் கல்வியைத் தொடக்கி வைத்தனா்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தோா் தங்களது குழந்தைகளுடன் இக்கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

விஜயதசமியை முன்னிட்டு பள்ளிகளில் தொடக்க நிலை வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT