கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே இளைஞா் தற்கொலை

மாா்த்தாண்டம் அருகே பொறியியல் பட்டதாரி இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

DIN


களியக்காவிளை: மாா்த்தாண்டம் அருகே பொறியியல் பட்டதாரி இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள நல்லூா், நெடுவிளை பகுதியைச் சோ்ந்த ஜெயா மகன் ஜெயசூா்யா(21). பொறியியல் பட்டதாரியான இவா், சென்னையில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். அண்மையில் சொந்த ஊருக்கு வந்தவா் கடந்த சில நாள்களாக யாரிடமும் சரிவர பேசாமல் இருந்து வந்தாராம். ஞாயிற்றுக்கிழமை இரவு அறையில் தூங்கச் சென்றாா். திங்கள்கிழமை காலையில் வெகுநேரமாகியும் கதவை திறக்கவில்லையாம்.

சந்தேகமடைந்த பெற்றோா் ஜன்னல் வழியாக அறைக்குள் பாா்த்தபோது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

SCROLL FOR NEXT