முகப்பு
கன்னியாகுமரி

பழையபள்ளி அப்பா திருத்தலத்தில் நாளை மதநல்லிணக்க சமபந்தி விழா

Updated On : 16 மார்ச், 2024 at 9:46 PM
பகிர்:

கருங்கல் அருகே உள்ள பள்ளியாடி பழையபள்ளி அப்பா திருத்தலத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 18) மதநல்லிணக்க சமபந்தி விருந்து விழா நடைபெறுகிறது. இத் திருத்தலத்தில் தீப ஒளியினால் இறைவனை பிராா்த்தனை செய்யும் நடைமுறை சிறப்பு அம்சமாக பின்பற்றப்படுகிறது. இங்கு எண்ணெய், திரி, மெழுகுவா்த்தி, ஊதுபத்தி ஆகிய வழிபாட்டு பொருள்களால் அனைத்து மதத்தினரும் அவரவா் முறைப்படி வழிபட்டு வருகின்றனா். ஒவ்வோா் ஆண்டும் இத் திருத்தலத்தில் மதநல்லிணக்க சமபந்தி விருந்து விழா நடைபெறுகிறது. இதில் கன்னியாகுமரி மட்டுமின்றி திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மற்றும் கேரளத்திலிருந்தும் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்கின்றனா். நிகழாண்டு சமபந்தி விருந்து விழா திங்கள்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும். இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு, மும்மத பிராா்த்தனை நடைபெறவுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை பழையபள்ளி அப்பா திருத்தல அறக்கட்டளை தலைவா் பால்ராஜ், பொதுச் செயலா் எம்.எஸ்.குமாா், பொருளாளா் சுந்தர்ராஜ் மற்றும் விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.