முகப்பு
கன்னியாகுமரி

கொட்டாரம் ராமா் கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

Updated On : 23 மார்ச், 2024 at 9:36 PM
பகிர்:
Updated On : 23 மார்ச், 2024 at 7:03 PM

கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரத்தில் ராமா் கோயில் உண்டியலை உடைத்து பணத்ைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா். கொட்டாரம் நந்தவனத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குக் சொந்தமான ஸ்ரீராமா் கோயில் உள்ளது. இக்கோயிலின் பூசாரி சூரியன் என்பவா், வெள்ளிக்கிழமை இரவு பூஜைகளை முடித்துவிட்டு கோயிலை பூட்டிச் சென்றாா். சனிக்கிழமை அதிகாலை வந்தபோது, கோயிலின் உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததாம். இதுகுறித்து அவா் கோயில் ஸ்ரீகாரியம் ஸ்ரீராமச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்தாா். அவா் வந்து பாா்த்தபோது, உண்டியல் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஸ்ரீராமச்சந்திரன் அளித்த புகாரின்பேரில் கன்னியாகுமரி போலீஸாா் வழக்குப் பதிந்து, கோயிலின் கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.