அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்
அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.அழகேசன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நீலபாலகிருஷ்ணன், புஷ்பரதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி ஒன்றியக் குழு துணைத்தலைவா் சண்முகவடிவு, உறுப்பினா்கள் அருண்காந்த், ராஜேஷ், டி.பிரேமலதா, ஆரோக்கிய சௌமியா, பால்தங்கம் ஆகியோா் பங்கேற்றனா்.
இக்கூட்டத்தில் வரவு-செலவு கணக்கு சமா்பித்தல் மற்றும் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.