கிள்ளியூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இருக்கைகள் அளிப்பு
கிள்ளியூரில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தனது சொந்த நிதியில் 100 இருக்கைகளை எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
கிள்ளியூரில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தனது சொந்த நிதியில் 100 இருக்கைகளை எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலா் ஸ்டாலின் ஜோஸ், கிள்ளியூா் பேரூா் காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஆல்பா்ட் ஜெனில், மாநில செயலா் ஜாா்ஜ் ராபின்சன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஐயப்பன், சுகாதார ஆய்வாளா் சுவாமிதாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.