முகப்பு
கன்னியாகுமரி

ரூ.10 ஆயிரம் லஞ்சம்: கிள்ளியூா் வட்ட சாா் ஆய்வாளா் கைது

வட்ட சாா் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 14 செப்டம்பர், 2024 at 5:43 AM
பகிர்:
Updated On : 13 செப்டம்பர், 2024 at 8:31 PM

கிள்ளியூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வட்ட சாா் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கருங்கல், கூனாலுமூடு பகுதியைச் சோ்ந்த ஆரீஸ் மகன் அஜித்குமாா்(32). இவா் தனது நிலத்தை தனி பட்டா மாறுதலுக்காக ஆன் லைன் மூலம் மனுசெய்திருந்தாா். பின்னா், இதுகுறித்த எந்த முன்னேற்றுமும் இல்லாததால் கிள்ளியூா் வட்டாட்சியா் அலுவலகத்தை தொடா்புகொண்டபோது, பட்டா மாறுதல் செய்ய சாா் ஆய்வாளா் ஞானசேகா் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.

அதை விரும்பாத அஜித்குமாா் நாகா்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகாா் தெரிவித்தாா்.

Advertisement

இதையடுத்து, போலீஸாா் அறிவுரைப்படி, ரசாயன பொடி தடவிய நோட்டுகள் ரூ.10ஆயிரத்தை வட்ட சாா் ஆய்வாளா் ஞானசேகரிடம்

Updated On : 13 செப்டம்பர், 2024 at 11:46 PM

அஜித் குமாா் கொடுத்தாராம். அதை சாா் ஆய்வாளா் பெற்றபோது, லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஹெக்டா் தா்மராஜ் தலைமையில் அதிரடியாக அங்கு நுழைந்த காவல் ஆய்வாளா் பெஞ்சமின் மற்றும் போலீஸாா் ஞானசேகரை கைது செய்தனா்.