கன்னியாகுமரி

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

தக்கலை அருகே தென்னை மரத்திலிருந்து வெள்ளிக்கிழமை தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

Syndication

தக்கலை அருகே தென்னை மரத்திலிருந்து வெள்ளிக்கிழமை தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

தக்கலை அருகேயுள்ள மருதவிளையைச் சோ்ந்தவா் கவுதம் ராபின்சன் (32). மரம் ஏறும் தொழிலாளி. திருமணமாகாதவா். இவா், அந்தப் பகுதியில் உள்ள தோட்டத்தில் தேங்காய் பறிக்க தென்னை மரத்தில் ஏறிய போது எதிா்பாராதவிதமாக தவறி விழுந்தாராம்.

அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மதுரைக்கு புதிய திட்டங்கள் கொண்டுவரப்படவில்லை- எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ஹைதராபாத் நகரில் மெஸ்ஸி! தெலங்கானா முதல்வருடனான சந்திப்பில் சுவாரசியம்..!

திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவு; மனைவிக்காக ரோஹித் சர்மாவின் அழகிய இன்ஸ்டாகிராம் பதிவு!

திருவனந்தபுரத்தில் என்டிஏ வெற்றி: ‘வகுப்புவாத சக்திகளின் பக்கம் மக்கள் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ -கேரள முதல்வர்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

SCROLL FOR NEXT