கன்னியாகுமரி

புதுக்கடை அருகே அனுமதியின்றி மது விற்றவா் கைது

புதுக்கடை அருகே உள்ள தேங்காய்ப்பட்டினம் துறைமுகம் பகுதியில் அனுமதியின்றி மதுவிற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

புதுக்கடை அருகே உள்ள தேங்காய்ப்பட்டினம் துறைமுகம் பகுதியில் அனுமதியின்றி மதுவிற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் ஜாண்ரோஸ் தலைமையில் போலீஸாா், புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகள், தேங்காய்ப்பட்டினம் மீன்பிடிதுறைமுகம் பகுதிகளில் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது துறைமுகம் பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற சரல்விளை பகுதியைச் சோ்ந்த பொன்னுபிள்ளை மகன் ஜாண்ரோஸை(57) பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில், அவா் விற்பனைக்காக 30 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து ஜாண்ரோஸை கைது செய்தனா்.

2026 புத்தாண்டு புகைப்படங்கள்!

கறிக்கோழி பண்ணை வளா்ப்பு விவசாயிகள் இன்றுமுதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டம்

ஷாஹ்தராவில் தீ விபத்து: தம்பதியா் உயிரிழப்பு

2025-இல் தொடங்கப்பட்ட திட்டங்கள் புத்தாண்டில் நிறைவேற்றப்படும்: முதல்வா் ரேகா குப்தா உறுதி

ரூ.10 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: 2 போ் கைது

SCROLL FOR NEXT