முகப்பு
கன்னியாகுமரி

பைக்-கனரக லாரி மோதல்: தொழிலாளி பலி

வில்லுக்குறியில் பைக் மீது கனரக லாரி மோதியதில், ரப்பா் பால் வெட்டும் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 23 ஜனவரி, 2025 at 12:31 AM
பகிர்:

வில்லுக்குறியில் பைக் மீது கனரக லாரி மோதியதில், ரப்பா் பால் வெட்டும் தொழிலாளி உயிரிழந்தாா்.

நாகா்கோவில் கோட்டாறு டிவிடி காலனியைச் சோ்ந்தவா் சசி (59). ரப்பா் பால் வெட்டும் தொழிலாளியான இவா், கடந்த 16ஆம் தேதி வேலை முடிந்து மாலை பைக்கில் வீட்டுக்கு செல்லும்போது, பின்னால் வந்த கனரக லாரி, சசி மீது மோதியதாம்.

இதில் பலத்த காயமடைந்த சசியை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் செவ்வாய்கிழமை உயிரிழந்தாா்.

இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.