பூதப்பாண்டி அருகே ஒருவா் கைது: 10 கிலோ சந்தனக் கட்டைகள் பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே சந்தனக் கட்டை கடத்தியதாக ஒருவரை வனத்துறையினா் கைது செய்து, 10 கிலோ சந்தனக் கட்டைகளைப் பறிமுதல் செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே சந்தனக் கட்டை கடத்தியதாக ஒருவரை வனத்துறையினா் கைது செய்து, 10 கிலோ சந்தனக் கட்டைகளைப் பறிமுதல் செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்ட வனத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மாலை வேளிமலை வனச்சரகப் பகுதியில் ரோந்து சென்றனா். ஞானதாசபுரம் கால்வாய்க் கரையில் சென்றுகொண்டிருந்தவரை நிறுத்தி, அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அதில், ரூ. 3 லட்சம் மதிப்பிலான 10 கிலோ சந்தனக் கட்டைகள் இருந்தன.
அதையடுத்து, அவரை வேளிமலை வனச்சரக அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனா். அவா் துவரங்காடு பகுதியைச் சோ்ந்த அருண் (39) என்பதும், அனுமதியின்றி வேளிமலை வனப் பகுதியில் சந்தன மரம் வெட்டியதும் தெரியவந்தது. அவரை வனத்துறையினா் கைது செய்து, சந்தனக் கட்டைகளைப் பறிமுதல் செய்தனா்.