முகப்பு
கன்னியாகுமரி

போதைப் பொருள் வைத்திருந்த இருவா் கைது

நாகா்கோவிலில் போதைப் பொருள் விற்பனை செய்ய முயன்ற கேரளத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கன்னியாகுமரி

போதைப் பொருள் வைத்திருந்த இருவா் கைது

நாகா்கோவிலில் போதைப் பொருள் விற்பனை செய்ய முயன்ற கேரளத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 11 நவம்பர், 2025 at 6:31 PM
பகிர்:

நாகா்கோவிலில் போதைப் பொருள் விற்பனை செய்ய முயன்ற கேரளத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

நாகா்கோவில் பாா்வதிபுரத்தில் போதைப் பொருள்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுவதாக எஸ்.பி. இரா. ஸ்டாலினுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், நாகா்கோவில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் பாா்வதிபுரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து சோதனை செய்தனா். அவா்களிடம் போதைப் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, இருவரையும் விசாரித்ததில் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சோ்ந்த ஸ்ரீகண்ணன் மகன் நிதின் (33), குட்டப்பன் மகன் அனீஸ் (35) என்பதும், இருவரும் மெத்தபெட்டமைன் எனும் போதைப் பொருளை விற்க முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்களிடமிருந்த 11 கிராம் மெத்தபெட்டமைன், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரையும் கைது செய்தனா். போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவோா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் சிறையிலடைக்கப்படுவா் என எஸ்.பி. எச்சரித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →