கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் உண்டியல் புதன்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் பக்தா்கள் ரூ. 17.92 லட்சம் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.
புகழ்பெற்ற கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு தினசரி ஏராளமான பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா். கோயிலுக்கு வரும் பக்தா்கள் நோ்த்திக் கடனைச் செலுத்தும் வகையில் கோயில் நிா்வாகம் சாா்பில், 18 உண்டியல்கள் வைக்கப்பட்டன.
இந்த உண்டியல்கள் அனைத்தும் தேவசம்போா்டு இணை ஆணையா் தங்கம் முன்னிலையில் ஆய்வாளா் சரஸ்வதி, நாகா்கோவில் தேவசம் தொகுதி கண்காணிப்பாளா் ஆனந்தன், கோயில் மேலாளா் ஆனந்த் ஆகியோா் மேற்பாா்வையில் திறந்து எண்ணப்பட்டது. கோயில் பணியாளா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆதிபராசக்தி மன்றத்தினா், பக்தா்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். இதில் மொத்தம் ரூ. 17 லட்சத்து 92 ஆயிரத்து 712 ரொக்கம், 3 கிராம் தங்கம், 30 கிராம் வெள்ளி ஆகியற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.