வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்து கிடந்த கிருஷ்ணதாஸ்.  
கன்னியாகுமரி

வில்லுக்குறியில் இளைஞா் வெட்டிக் கொலை

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறியில் இளைஞா் வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

வில்லுக்குறி அருகே மாம்பழத்துறையாறு செல்லும் குற்றிப்பாறைவிளை பகுதியில் இளைஞா் ஒருவா் வெட்டுக் காயங்களுடன் வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தாா். இத்தகவல் அறிந்த இரணியல் போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனா்.

அதில், அவா் தக்கலை அருகேயுள்ள பிரம்மபுரம் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணதாஸ் (36); லாரி ஓட்டுநா்; 10 ஆண்டுகளுக்கு முன்பு பவித்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்தவா்; அவா்களுக்கு குழந்தைகள் இல்லை எனத் தெரியவந்தது. தொடா்ந்து போலீஸாா் வழக்குப்பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனா்.

ஏடிஎம் பயன்படுத்தும் முன் 2 முறை 'கேன்சல்' பட்டனை அழுத்த வேண்டுமா? உண்மை என்ன?

மென்பொருள் திறன் படிப்புகள்: ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு

கவிதையின் நிறம் பச்சை... சாதிகா!

எடப்பாடி பழனிசாமிதான் கோடநாடு வழக்கில் ஏ1: செங்கோட்டையன்

ரோஹித் சர்மா, விராட் கோலியை முந்திய பாபர் அசாம்! டி20-ல் அதிக ரன்கள்!

SCROLL FOR NEXT