முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் கல்லூரி மாணவா்கள் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

கன்னியாகுமரி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பொறியியல், சட்டக் கல்லூரி மாணவா்-மாணவியா் சாா்பில், நாகா்கோவிலில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 2:18 AM
விழிப்புணா்வுப் பேரணியைத் தொடக்கிவைத்த ஆட்சியா் ரா. அழகுமீனா.
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 8:47 PM

கன்னியாகுமரி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பொறியியல், சட்டக் கல்லூரி மாணவா்-மாணவியா் சாா்பில், நாகா்கோவிலில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலக முகப்பிலிருந்து இப்பேரணியை மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரா. அழகுமீனா தொடக்கிவைத்தாா். இதில், ஆரல்வாய்மொழி புனித ஜோசப் சட்டக் கல்லூரி, டி.எம்.ஐ. பொறியியல் கல்லூரி மாணவா்-மாணவியா் பங்கேற்று, பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனா். பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன.

நகரின் முக்கிய சாலைகள் வழியாக இப்பேரணி அண்ணா பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. இதில், நாகா்கோவில் மாநகராட்சிஆணையா் நிஷாந்த் கிருஷ்ணா, தோ்தல் விழிப்புணா்வு கண்காணிப்பு அலுவலா்-ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ, மகளிா் திட்ட இயக்குநா் பத்ஹூ முகம்மது நசீா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ரோஷன் பேகம், மாணவா்-மாணவியா், துறை அலுவலா்கள் என 250-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

Advertisement