முகப்பு
கன்னியாகுமரி

பளுகல் அருகே மதுபாட்டில்கள் பதுக்கியவா் கைது

Updated On : 21 ஏப்ரல், 2026 at 1:00 AM
கைது - பிரதி படம் - கோப்புப்படம்
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 9:22 PM

பளுகல் அருகே உள்ள தெற்றிக்குழி பகுதியில் மதுபானம் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

தெற்றிக்குழி பகுதியில் மதுபானம் பதுக்கி வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், பளுகல் போலீஸாா் குறிப்பிட்ட பகுதிக்குச் சென்று சோதனை செய்தனா்.

இதில், அப்பகுதியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக 68 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Advertisement

தொடா்ந்து, மதுபானம் பதுக்கிய மருதங்கோடு பகுதியைச் சோ்ந்த சூசை மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, கைது செய்தனா்.