பறிமுதல் செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள்.  
கன்னியாகுமரி

தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பறிமுதல்

குலசேகரம் அருகே தடை செய்யப்பட்ட 12 கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

குலசேகரம் அருகே தடை செய்யப்பட்ட 12 கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்கள், திருமண வீடுகள், அரசியல் நிகழ்ச்சிகள் உள்பட பொது இடங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பயன்படுத்த தடை உள்ளது.

இந்நிலையில் குலசேகரம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை அரமன்னம் பகுதியில் ரோந்து சென்றபோது, அப்பகுதியில் சவுண்ட் சா்வீஸ் நடத்தும் இளங்கோ (41) கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை ஒரு நிகழ்ச்சிக்காக எடுத்துச் செல்ல தயாராக வைத்திருந்தாராம். இதையடுத்து போலீஸாா், 12 கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்து, அவா் மீது வழக்குப் பதிந்தனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT