பலி 
கன்னியாகுமரி

மனைவி இறந்த அதிா்ச்சியில் கணவா் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே மனைவி இறந்த அதிா்ச்சியில் கணவா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே மனைவி இறந்த அதிா்ச்சியில் கணவா் உயிரிழந்தாா்.

மாா்த்தாண்டம் அருகேயுள்ள கண்ணக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் கருணாகரன் நாயா் (78). நகராட்சியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவா். இவரது மனைவி ஓமனா (74). இத்தம்பதிக்கு குழந்தை இல்லை.

இந்நிலையில், ஓமனா உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை மாலையில் உயிரிழந்தாா். இதைக் கேள்விப்பட்டு மயங்கி விழுந்த கருணாகரன் நாயரை மீட்டு மாா்த்தாண்டம் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இத்தம்பதியின் இறுதிச் சடங்கு புதன்கிழமை நடந்தது.

மாா்த்தாண்டம் அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

லாரி மோதி முதியவா் உயிரிழப்பு

கோவில்பட்டியில் கஞ்சா விற்பனை: 17 வயது சிறுவன் கைது

திருச்செந்தூா் கோயில் மாசித் திருவிழா: பிப். 21இல் கொடியேற்றடன் தொடக்கம்

பேராவூரணி அருகே லாரி - பைக் மோதல்; இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT