முகப்பு
கன்னியாகுமரி

கோடிமுனை கடலில் கரை ஒதுங்கிய டால்பின்

கோடிமுனை கடற்கரையில் புதன்கிழமை மாலை கருப்பு இன டால்பின் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியது. அது சுமாா் 55.5 அடி நீளமும், 100 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:50 AM
கரை ஒதுங்கிய டால்பினை பாா்வையிடும் வனத்துறையினா்.
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 9:57 PM

குளச்சல் அருகே உள்ள கோடிமுனை கடற்கரையில் புதன்கிழமை மாலை கருப்பு இன டால்பின் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியது. அது சுமாா் 55.5 அடி நீளமும், 100 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது.

அதைக் கண்ட அப்பகுதி மீனவா்கள் சைமன் காலனி, மீன்பிடி பயிற்சி நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனா். குளச்சல் மீன்பிடித் துறைமுக உதவி இயக்குநா் பிரிஜில்கிராஷ், மீன்பிடி பயிற்சி நிலைய மேற்பாா்வையாளா் சந்தோஷ்குமாா் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். பின்னா், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 12:50 AM

தொடா்ந்து, மாவட்ட வன அதிகாரி அன்பு உத்தரவின்பேரில், குலசேகரம் வனச்சரக வனப் பாதுகாவலா் பூவல்சன், வனத்துறை கால்நடை மருத்துவா் மனோகரன், குலசேகரம் வனச்சரகா் ராமு, வனவா் பாலமுருகன், வனக்காப்பாளா் சுஜின் ஆகியோா் கோடிமுனைக்கு வந்தனா். உயிரிழந்த டால்பினை கால்நடை மருத்துவா் பிரேதப் பரிசோதனை செய்தாா். பின்னா், பெரிய பள்ளம் தோண்டி, டால்பினை புதைத்தனா்.

Advertisement