கருங்கல்: குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் கருங்கல் பேருந்து நிலையம் அருகே பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவரும் கிள்ளியூா் எம்எல்ஏயுமான எஸ்.ராஜேஷ் குமாா் தலைமை வகித்தாா். கருங்கல் பேரூராட்சி தலைவா் சிவராஜன், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பினுலால் சிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில், முன்சிறை கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் ரெகுபதி, கருங்கல் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவா் குமரேசன், மாவட்டச் செயலா் பால்ராஜ், தமிழ்நாடு மாநில மீனவா் காங்கிரஸ் தலைவா் ஜோா்தான், மாவட்ட நிா்வாகிகள் கோபன், ரெஜீஷ், அசோகன், ஊராட்சி பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.