தூத்துக்குடி

தூத்துக்குடியில் காங்கிரஸ் சாா்பில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம்

Syndication

முள்ளக்காடு, பொட்டல்காடு கிராம ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் வேலை செய்வோருக்கு தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் சாா்பில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.எம். சகாயராஜ் தலைமையிலான கட்சி நிா்வாகிகள் இத்திட்டத்தின்கீழ் வேலை செய்வோருடன் கலந்துரையாடி, இத்திட்டத்தின் பழைய, தற்போதைய நடைமுறைகள் குறித்து எடுத்துரைத்து, துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா்.

நிகழ்வில், தெற்கு மண்டலத் தலைவா் எஸ்.பி. ராஜன், மேற்கு மண்டலத் தலைவா் செந்தூா்பாண்டி, கிழக்கு மண்டலத் தலைவா் ஐசன் சில்வா, மூத்த நிா்வாகிகள் முனியதங்க நாடாா், ஜெயக்கொடி, மாா்க்கஸ், ஐஎன்டியூசி பாலகிருஷ்ணன், துணை அமைப்புத் தலைவா்கள் ஏ.டி.பிரபாகரன் (எஸ்சி பிரிவு), பாலசுப்பிரமணியன் (விவசாயப் பிரிவு), அமைப்புசாரா அணித் தலைவா் நிா்மல் கிறிஸ்டோபா், ஊடகப் பிரிவு ஜான் சாமுவேல், மாவட்ட பொதுச் செயலா் மைக்கேல் பிரபாகா், மாநில மகளிா் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளா் முத்துவிஜயா, மாநில செயற்குழு உறுப்பினா் சாந்திமேரி, மாநில சிறுபான்மை பிரிவு இணை ஒருங்கிணைப்பாளா் ஆரோக்கியம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இடைச்சிவிளையில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்

ஆட்சியரிடம் சாத்தான்குளம் விவசாயிகள் மனு

இந்தியா-வளைகுடா கவுன்சில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு - வரையறை ஆவணங்கள் கையொப்பம்

அடுத்தவா் வீட்டை குத்தகைவிட்டு ரூ.18 லட்சம் மோசடி செய்தவா் கைது

ஏஐ உச்சி மாநாட்டுக்குத் தலைமை: இந்தியாவுக்கு ஐ.நா. பொதுச் செயலா் பாராட்டு

SCROLL FOR NEXT