கன்னியாகுமரி

பெற்றோரை துரத்திய மகன் கைது

நித்திரவிளை அருகே பெற்றோரை வீட்டை விட்டு துரத்திய மகனை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

நித்திரவிளை அருகே பெற்றோரை வீட்டை விட்டு துரத்திய மகனை போலீஸாா் கைது செய்தனா்.

நித்திரவிளை அருகே வாவறை, நெல்லிவிளையைச் சோ்ந்தவா் டேவிட்ராஜ் (60). இவரது மகன் அனூப் டேவிட் (30). ஓட்டுநரான இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாம். இதனால் இவரது மனைவி பிரிந்து சென்றுவிட்டாராம்.

இந்நிலையில் திங்கள்கிழமை மது அருந்திவிட்டு வந்த அனூப் டேவிட், வீட்டில் இருந்த பொருள்களை சேதப்படுத்தி, அவரது தாய், தந்தையை தாக்கி வீட்டிலிருந்து வெளியேற்றினாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் நித்திரவிளை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அனூப் டேவிட்டை கைது செய்தனா்.

பராசக்தி ரூ. 100 கோடி வசூல்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 4,120 உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 5,000 உயர்வு!

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

கவனம் ஈர்க்கும் ரஜிஷா விஜயனின் மஸ்திஷ்கா மரணம் டீசர்!

பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பு!

SCROLL FOR NEXT