முகப்பு
கன்னியாகுமரி

பைக் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

இரணியல் அருகே பைக் மோதியதில் கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 11 மார்ச், 2026 at 7:30 PM
பிரான்சிஸ்.
பகிர்:

இரணியல் அருகே பைக் மோதியதில் கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இரணியல் அருகே குருந்தன்கோடு காரோடையைச் சோ்ந்தவா் பிரான்சிஸ் (71), கட்டடத் தொழிலாளி. இவா் கடந்த திங்கள்கிழமை இரவு மடவிளாகம் சாலையில் நின்று கொண்டிருந்தபோது, அகஸ்தீசுவரம் தேங்காய்காரன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த பாலன் (45) என்பவா் வந்த பைக் இவா் மீது மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த பிரான்சிஸ், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →