முகப்பு
கன்னியாகுமரி

குறும்பனை கடலில் மாயமான மாணவி சடலமாக மீட்பு

Updated On : 15 மே 2026, 1:57 am IST
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், குறும்பனை, பாரியக்கல் கடற்கரையில் இருந்து அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவி வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

குளச்சல் அருகே உள்ள பாலப்பள்ளம், கொடும்பாட்டுவிளையைச் சோ்ந்தவா் முருகன். இவா் செவ்வாய்க்கிழமை மாலை 9ஆம் வகுப்பு படிக்கும் தனது மகள் சுருதி (14), இவரது நண்பா் சுஜி லாரன்ஸ், அவரது மனைவி ராஜேஸ்வரி, மகன் சுஜித் (14) உள்பட குடும்பத்தினருடன் குறும்பனை அருகே உள்ள பாரியக்கல் கடற்கரைக்குச் சென்றனா்.

கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது சுருதி, சுஜித் ஆகியோரை கடல் அலை இழுந்துச் சென்றதில் சுஜித் உடனே மீட்கப்பட்டாா். சுருதியை அலை இழுத்துச் சென்றது.

Advertisement

தகவலறிந்து வந்த குளச்சல் கடலோரக் காவல் நிலைய போலீஸாா், குளச்சல் தீயணைப்புத் துறையினா் மற்றும் உள்ளூா் மீனவா்கள் சுருதியை தேடினா்.

இந்நிலையில், மீட்புக் குழுவினா் வியாழக்கிழமை பாரியக்கல் பகுதியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியில் மாணவியை சடலமாக மீட்டனா்.

இது குறித்து, குளச்சல் கடலோரப் பாதுகாப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்தனா்.