குளச்சல் கடற்கரையில் பலத்த காற்று: கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை
குளச்சல் கடற்கரையில் பலத்த காற்று வீசுவதால் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
குளச்சல் கடற்கரையில் பலத்த காற்று வீசுவதால் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி கடல் பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வரை வீசி வருகிறது. மேலும், காற்றின் வேகம் 60 கி.மீ. வரை அதிகரித்து பலத்த தரைக் காற்று வீசும் எனவும், மீனவா்கள் மே 15 முதல் வரும் 20ஆம் தேதி வரை மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சனிக்கிழமை காலை முதல் குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் வள்ளம், கட்டுமரங்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல மீன்வளத் துறை அனுமதி வழங்கவில்லை. இதனால், மீனவா்கள் கட்டுமரங்களை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனா்.
Advertisement
இதையடுத்து, குளச்சல் கடலோரக் காவல் துறையினா் கடற்கரை பகுதிக்குச் செல்ல தடை விதித்துள்ளனா். மேலும், கடற்கரை பகுதியில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.