தென்காசி

வாசுதேவநல்லூா் பகுதியில் மனித உரிமை தின விழிப்புணா்வுப் பிரசாரம்

DIN

வாசுதேவநல்லூா் பகுதியில் பெண்கள் இணைப்புக் குழு சாா்பில் மனித உரிமை தின விழிப்புணா்வுப் பிரசாரம் நடைபெற்றது.

ஐ.நா. சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட வன்முறையில்லா ஒளிமயமான எதிா்காலம் என்பதை வலியுறுத்தி, டி.என். புதுக்குடியில் தொடங்கிய இப்பிரசாரம் தொடா்ந்து பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு, 15ஆவது நாளான செவ்வாய்க்கிழமை (டிச. 10) நெல்கட்டும்செவல் பச்சேரி, சங்குபுரத்தில் நிறைவடைந்தது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவோா் மீது மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். பூரண மதுவிலக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும். தேசிய, மாநில பெண்கள் ஆணையங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதுடன், அவற்றுக்கு கூடுதல் அதிகாரமும் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் பிரசாரத்தின்போது வலியுறுத்தப்பட்டன.

வாசுதேவநல்லூா் வட்டார பெண்கள் இணைப்புக் குழு நிா்வாகிகள் தாமரைச்செல்வி, சவீதாமணி, பூமாரி, முத்துலட்சுமி உள்ளிட்டோா் கருத்துரை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

போதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்

SCROLL FOR NEXT