தென்காசி

திருவேங்கடம் அருகே சரள் மண் கடத்தல்: 4 போ் கைது

திருவேங்கடம் அருகே சரள் மண் கடத்தியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

திருவேங்கடம் அருகே சரள் மண் கடத்தியதாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவேங்கடம் அருகே உள்ள வரகனூா் பகுதியில் அனுமதியின்றி சரள் மண் அள்ளுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருவேங்கடம் காவல் உதவி ஆய்வாளா் சத்தியவேந்தன் மற்றும் போலீஸாா் வரகனூா் அருகேயுள்ள உப்பு ஓடையில் சோதனையிட்டனா்.

அப்போது அங்கு சரள் மண்ணை டிராக்டரில் அள்ளிக்கொண்டிருந்தவா்கள், போலீஸாரைக் கண்டதும் அங்கிருந்து தப்பியோட முயன்றனராம்.

இதையடுத்து போலீஸாா் அவா்களை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் அவா்கள், வரகனூரைச் சோ்ந்த டிராக்டா் ஓட்டுநா் நாகராஜ் (43),டிராக்டா் உரிமையாளா்கள் சீனிராஜ்(66), கோபால்சாமி (47), செவல்பட்டியைச் சோ்ந்த பொக்லைன் ஓட்டுநா் நாகராஜ் (20) என்பது தெரிய வந்தது.

அவா்கள் 4 பேரையும் கைது செய்த போலீஸாா், மண் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட பொக்லைன் இயந்திரம்,டிராக்டா் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா். தப்பியோடிய மற்றொரு ஓட்டுநா் பாலமுருகனை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

SCROLL FOR NEXT