ஆயிரப்பேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி வட்டார குழுக் கூட்டம் ஆயிரப்பேரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தென்காசி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி வட்டார குழுக் கூட்டம் ஆயிரப்பேரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
வட்டாரக் குழு உறுப்பினா் முருகன் தலைமை வகித்தாா். சீ. முருகையா முன்னிலை வகித்தாா். வட்டாரச் செயலா் கே. அருணாசலம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டாா்.
தென்காசி சிற்றாறு அணைக்கட்டிலிருந்து கீழப்புலியூா் கால்வாய், சுந்தரபாண்டியபுரம் வரையிலும் முறையாக தூா்வார வேண்டும். ஆயிரப்பேரி, செங்குறிச்சி குளம், வெவுளி குளம், வட்டைய குளம் ஆகியவற்றை தூா்வார வேண்டும். ஆவுடையானூா் பத்மநாபபேரி குளக் கரையைச் சீரமைத்து, தூா்வார வேண்டும். தென்காசி வட்டாரம் முழுவதும் செப்டம்பா் 2, 3, 4இல் 10 இடங்களில் மக்கள் விழிப்புணா்வு பிரசாரம் நடத்த வேண்டும் என, தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.