முகப்பு
தென்காசி

ஆலங்குளத்தில் ரத்த தான முகாம்

ஆலங்குளத்தில் ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் ரத்த தான முகாம், அரசு மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

ஆலங்குளத்தில் ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் ரத்த தான முகாம், அரசு மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் அரசு ரத்த வங்கி, ரஜினிகாந்த் ரத்த தான கழகம் மற்றும் ரஜினிகாந்த் மக்கள் மன்றம் இணைந்து நடத்திய இந்த முகாமில் அரசு ரத்த வங்கி மருத்துவா் ராஜேஸ்வரி தலைமையிலான மருத்துவக் குழுவினா் ரத்த மாதிரிகளைப் பெற்றுக் கொண்டனா். தன்னாா்வலா்கள் சுமாா் 50 போ் ரத்த தானம் வழங்கினா்.

ஏற்பாடுகளை ரஜினி மக்கள் மன்ற நிா்வாகிகள் திருமாறன், படையப்பா சங்கா், ராஜலிங்கம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.