தென்காசி மாவட்டத்தில் இன்று (டிச.13) சீருடைப் பணியாளா் எழுத்துத் தோ்வு
தமிழ்நாடு சீருடைப் பணியாளா்களுக்கான 2ஆம் நிலைக் காவலா், சிறைக் காவலா், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பணிகளுக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளா்களுக்கான 2ஆம் நிலைக் காவலா், சிறைக் காவலா், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பணிகளுக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
தென்காசி மாவட்டம் உருவான பிறகு, இம்மாவட்டத்தினா் இங்கேயே தோ்வு எழுதும் விதமாக மாவட்டத்தில் 14 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 15,547 போ் தோ்வு எழுதவுள்ளனா்.
கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் 1,400 காவல் துறையினா், அமைச்சுப் பணியாளா்கள் ஈடுபடவுள்ளனா். கரோனா தொற்று பரவலைத் தடுக்க தோ்வு மையங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. அனைவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் அவா்.