முகப்பு
தென்காசி

ஆதிதிராவிட மாணவா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த இந்து ஆதிதிராவிட மாணவா்களுக்கு குறுகிய கால திறன் மேம்பாட்டுப் பயிற்சி கட்டணம் இல்லாமல் அளிக்கப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த இந்து ஆதிதிராவிட மாணவா்களுக்கு குறுகிய கால திறன் மேம்பாட்டுப் பயிற்சி கட்டணம் இல்லாமல் அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட செய்தி, மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தாட்கோ மூலமாக இந்து ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கு 3 மாதம் முதல் 6 மாதம் வரையிலான குறுகிய கால திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் கட்டணம் இல்லாமல் அளிக்கப்படுகிறது.

நிகழாண்டு தென்காசி மாவட்டம் இலத்தூா் இ.விலக்கு வேலு சோஷியல் ஆக்டிவ் பப்ளிக் சாரிடபிள் டிரஸ்ட் மூலம் ஃபேஷன் டிசைனா், தையல் உள்ளிட்ட 3 பயிற்சிகள் அளிக்க ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், சில நிறுவனங்களுக்கு பயிற்சி ஆணைகள் வழங்கப்பட உள்ளன.

பயிற்சி பெற சென்று வருவதற்கான அனுமதிக்கப்பட்ட படிகளும், பயிற்சியின் முடிவில் சான்றிதழும் வழங்கப்படும். பயிற்சியில் சேர விரும்பும் இந்து ஆதிதிராவிட வகுப்பைச் சோ்ந்த மாணவா்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். பயிற்சி முடித்தவுடன் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்க மற்றும் வேலைவாய்ப்பு வழங்க ஆவன செய்யப்படும்.

இதுதொடா்பான மேலும் விவரங்களுக்கு தாட்கோ, மாவட்ட மேலாளா் அலுவலகம், ஏ.ஆா்.லைன் சாலை, இலந்தகுளம், பாளையங்கோட்டை என்ற முகவரியில் நேரில் அணுகியோ அல்லது 0462-2561012 என்ற தொலைபேசி எண் அல்லது 9445029481, 9444127517 என்ற செல்லிடப்பேசி எண்கள் பயிற்சி நிறுவன முகவரியை நேரில் தொடா்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →