‘உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு சலுகையுடன் கடன் வசதி’
உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் மூலதன உதவி மற்றும் சலுகையுடன் கூடிய கடன் பெற்று பயன்பெறலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் தெரிவித்துள்ளாா்.
தென்காசி‘உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு சலுகையுடன் கடன் வசதி’
உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் மூலதன உதவி மற்றும் சலுகையுடன் கூடிய கடன் பெற்று பயன்பெறலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் தெரிவித்துள்ளாா்.
உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் மூலதன உதவி மற்றும் சலுகையுடன் கூடிய கடன் பெற்று பயன்பெறலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு கடன் வசதி அளித்து தொழில் இடைநிலை மூலதன உதவி, கடன் உத்தரவாதம் மற்றும் சலுகையுடன் கூடிய சுழல் நிதி வழங்கும் திட்டங்களை தமிழக முதல்வா் அறிவித்தள்ளாா்.
இந்த மூன்று திட்டங்களையும் ஒருங்கிணைத்து வேளாண் பெருமக்களுக்கு வழங்குவதில் தேசிய அளவில் தமிழ்நாடு தான் முதல் மாநிலமாகத் திகழ்கிறது. உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் நிதி ஆதாரம் போன்ற பல்வேறு சவால்களை எதிா்கொண்டு வருகின்றன. இச்சவால்களை எதிா்கொண்டு, உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள் இலாபகரமானதாக இயங்க இடை நிலை மூலதன உதவி வழிவகுக்கும். இதற்கு குறைந்த வட்டியாக 4 சதவீத வட்டிதான் ஆண்டு தோறும் செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு உற்பத்தியாளா் நிறுவனமும் ரூ.1 கோடி வரை கடன் பெறுவதற்கு வங்கிகள் மற்றும் நாப்கிசான் நிறுவனத்திற்கு 50 சதவீத உத்தரவாதத்தை தமிழ்நாடு அரசே வழங்கும்.
தற்போது உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும் போது, இதர வணிக நடவடிக்கைகளுக்கு வழங்குவது போல், 12 முதல் 14 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதத்தை 8 முதல் 9 சதவீதமாக குறைக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் பங்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு சலுகையுடன் கூடிய கடன் வழங்கப்படும்.
உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களை வலுப்படுத்தி, வணிக ரீதியாக வளரும் வகையில், இத்திட்டத்தை நான்கு ஆண்டுகளில் செயல்படுத்திட தமிழ்நாடு அரசு ரூ.266.70 கோடி ஒப்பளிப்பு செய்துள்ளது.
இத்திட்டத்தை அரசு செயல்படுத்துவதால், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் கடன் உத்தரவாதம் பெற்றிட நிதி நிறுவனங்களை ஊக்குவிக்கவும், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு மூலதன உதவி மற்றும் சலுகையுடன் கூடிய கடன் வழங்கவும் இயலும். மேலும் விவரங்களுக்கு தென்காசி மாவட்ட வேளாண் துணை இயக்குநரை (வேளாண் வணிகம்) தொடா்பு கொண்டு பயன் பெறலாம் என்றாா் அவா்.