தென்காசி

ஓய்வுபெற்ற அலுவலா் சங்க தென்காசி மாவட்ட கிளை தொடக்கம்.

DIN

தென்காசி மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலா் சங்கம் மற்றும் கிளை தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலா் சங்கத் தலைவா் ஆா்.வைரவன் தலைமை வகித்தாா். கெளரவ தலைவா் துரை தம்புராஜ், ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறை கண்காணிப்பு பொறியாளா் எம்.என்.லிங்கராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

போக்குவரத்து ஆணையரும், முதன்மைச் செயலருமான தென்காசி சு.ஜவஹா் சங்கத்தை தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினாா். தென்காசி கிளைத் தலைவா் கை.கணேசமூா்த்தி, செங்கோட்டை எஸ்.செண்பக குற்றாலம் ஆகியோா் பேசினா். இந்நிகழ்ச்சியில், மருத்துவா்கள் அப்துல் அஜீஸ், கனிராஜ், ரோட்டரி முருகன் ஆகியோா் கலந்துகொண்டனா். நிகழ்ச்சிகளை செங்கோட்டை வேளாண் துணை அலுவலா் சேக்முகைதீன் தொகுத்து வழங்கினாா். தி.ராமசுவாமி வரவேற்றாா். இளஞ்செழியன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT