தென்காசி

புன்னையாபுரத்தில் ஜன.30இல்புண்ணிய பாபா ஆலய கும்பாபிஷேகம்

புளியங்குடி அருகேயுள்ள புன்னையாபுரம் ஸ்ரீ புண்ணிய பாபா ஆலயத்தில் வியாழக்கிழமை (ஜன.30) நூதன ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

DIN

புளியங்குடி அருகேயுள்ள புன்னையாபுரம் ஸ்ரீ புண்ணிய பாபா ஆலயத்தில் வியாழக்கிழமை (ஜன.30) நூதன ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

தென்காசி, மதுரை பிரதான சாலையில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திங்கள்கிழமை அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், கிராம தேவதைகள் பூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

செவ்வாய், புதன்கிழைமகளில் (ஜன. 28, 29) 1ஆம், 2ஆம் யாக சாலை பூஜை உள்பட பல்வேறு வழிபாடுகள் நடைபெறுகின்றன. வியாழக்கிழமை (ஜன.30) காலை 7 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, ஸ்ரீ புண்ணிய பாபா ஆலய கோபுர கும்பாபிஷேகம், மூலவா் ஸ்ரீ புண்ணிய பாபா மற்றும் பரிவார தெய்வங்களுக்கு நூதன ஆலய மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை உலகா சுந்தா், மாரியப்பன், திருமலைபாரதி, ராஜகணேஷ் மற்றும் விழாக்குழுவினா் செய்து வருகின்றனா் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT