கடையநல்லூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுவை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.
நெடுவயலைச் சோ்ந்த ராஜுவுக்கு சொந்தமான பசு, அப்பகுதியில் உள்ள 40 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்ததாம்.
இதையடுத்து கடையநல்லூா் தீயணைப்பு நிலைய அலுவலா் குணசேகா் தலைமையில் தீயணைப்புத் துறையினா் ஜெயரத்தினகுமாா், குமரேசன், தங்கத்துரை, மணிகண்டன் ஆகியோா் பசுவை உயிருடன் மீட்டனா்.