தென்காசி மாவட்டத்தில் 28இல் காணொலி மூலம் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
தென்காசி மாவட்டத்தில் அக். 28ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடைபெறுகிறது.
தென்காசி மாவட்டத்தில் அக். 28ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா்தயாளன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆட்சியா் அலுவலகத்தில் மாதந்தோறும் மூன்றாவது வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த ஐந்துமாதங்களாக இக்கூட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் அக். 28ஆம்தேதி காணொலிக் காட்சி மூலம் இக்கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில், வேளாண், தோட்டக்கலைத் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் கலந்துகொள்ள உள்ளனா்.
தென்காசி, செங்கோட்டை வட்டார விவசாயிகள் தென்காசி வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்திலும், கடையநல்லூா், வாசுதேவநல்லூா் வட்டார விவசாயிகள் கடையநல்லூா் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்திலும், கடையம், ஆலங்குளம், கீழப்பாவூா் வட்டார விவசாயிகள் கீழப்பாவூா் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்திலும், சங்கரன்கோவில் வட்டார விவசாயிகள் சங்கரன்கோவில் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்திலும், குருவிகுளம், மேலநீலிதநல்லூா் வட்டார விவசாயிகள் குருவிகுளம் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்திலும் காணொலிக் காட்சி மூலம் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
எனவே விவசாயிகள் மனுக்களுடன் கூட்டத்தில் கலந்துகொண்டு பயனடைய வேண்டும் என்றாா் அவா்.