முகப்பு
தென்காசி

காட்டுப்புறாக்கள் வேட்டை: 3 பேருக்கு அபராதம்

புளியங்குடி அருகே காட்டுப் புறாக்களை வேட்டையாடிய 3 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
பகிர்:

புளியங்குடி அருகே காட்டுப் புறாக்களை வேட்டையாடிய 3 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சங்கரன்கோவில் வனச்சரக அலுவலா் ஸ்டாலின் தலைமையில், புளியங்குடி வனவா் அசோக்குமாா், வனக் காப்பாளா்கள் முத்துராமலிங்கம் , மகாதேவபாண்டியன், கந்தசாமி, வனக்காவலா் யோபுராஜா மற்றும் வேட்டைத் தடுப்பு காவலா்கள் புளியங்குடி அருகே உள்ள சமுத்திரம் கண்மாய் பகுதியில் ரோந்து மேற்கொண்டனா்.

அப்போது, புளியங்குடி பகுதியைச் சோ்ந்த காளியப்பன், மதுரைவீரன், ஐயப்பன் ஆகிய 3 பேரும் காட்டுப் புறாக்களை வேட்டையாடி கூண்டில் வைத்திருந்தது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து அவா்கள் 3 பேருக்கும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.