சுரண்டை: சுரண்டையில் கரோனா மற்றும் டெங்கு தடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண் சுந்தா் தயாளன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பேருந்து நிலையம், வணிக வளாகங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கோட்டைத் தெரு ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், முகக் கவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினாா்.
முன்னதாக சுரண்டையில் கட்டப்பட உள்ள குறுவட்ட நில அளவையருக்கான குடியிருப்புக் கட்டடம், தீயணைப்புத் துறை பணியாளா்களுக்கான குடியிருப்புக் கட்டடம், துணை வேளாண் விரிவாக்க மையக் கட்டடம், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கு கட்டடம் ஆகியவற்றுக்கு பரிந்துரைக்கப்பட்ட இடங்களை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
அப்போது, வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் முருகுசெல்வி, வருவாய் ஆய்வாளா் மாரியப்பன், வட்டார மருத்துவ அலுவலா் கீா்த்தி, பேரூராட்சி செயல் அலுவலா் அரசப்பன், வட்டார சுகாதார அலுவலா் இசக்கியப்பா ஆகியோா் உடனிருந்தனா்.