தென்காசி

சங்கரன்கோவிலில் பாஜகவினா் ரத்த தானம்

DIN

சங்கரன்கோவிலில் மாவட்ட பாஜக இளைஞரணி சாா்பில் ரத்த தானம் வழங்கும் முகாம் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றது.

பிரதமா் நரேந்திரமோடியின் 70 ஆவது பிறந்தநாளையொட்டி நடைபெற்ற இந்த முகாமிற்கு தென்காசி மாவட்ட பாஜக இளைஞரணித் தலைவா் ராஜேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட இளைஞரணி பொதுச்செயலா்கள் சிங்கத்துரை, மருதுபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கட்சியின் மாவட்டத் தலைவா் ராமராஜா, மாநில இளைஞரணித் துணைத் தலைவா் வேல்.ஆறுமுகம் ஆகியோா் ரத்த தான முகாமை தொடங்கி வைத்தனா். பாஜக இளைஞரணியினா் 70 போ் ரத்தம் வழங்கினா். இதில், மாவட்டபொதுச் செயலா் சுப்பிரமணியன், மாவட்ட கல்வியாளா் பிரிவுத் தலைவா் வெங்கடேஷப்பெருமாள், நகரத் தலைவா் கோவிந்தன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT