தென்காசி

குற்றாலம் அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரிப்பு

DIN

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் பெய்துவரும் சாரல் மழை காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.

குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது மிதமான சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் பேரருவியில் பாதுகாப்பு வளைவின் மீதும், ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீா் கொட்டுகிறது. மேலும், பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவியிலும் தண்ணீா் விழுகிறது.

கரோனா தொற்றுப் பரவலைத் தவிா்க்கும் பொருட்டு குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகள் சற்று தொலைவில் நின்று அருவியை பாா்த்துவிட்டுச் செல்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

SCROLL FOR NEXT