பேருந்து நிலையம் முன் மறியலில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா். 
தென்காசி

சங்கரன்கோவிலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மறியல்: 90 போ் கைது

வேளாண் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி, சங்கரன்கோவிலில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்ட 90 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

சங்கரன்கோவில், செப். 25: வேளாண் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி, சங்கரன்கோவிலில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்ட 90 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வேளாண் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், அக்கட்சிகளின் விவசாய தொழிற்சங்கத்தினா் உள்ளிட்டோா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலிருந்து ஊா்வலமாக புறப்பட்டு, பேருந்து நிலையம் முன் வந்து மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டாரச் செயலா் அசோக்ராஜ், மாவட்ட விவசாயத் தொழிற்சங்கச் செயலா் உ.முத்துப்பாண்டியன், பாலுச்சாமி, இந்திய கம்யூனிஸ்ட் வட்டாரச் செயலா் எம்.குருசாமி, காளியப்பன் மற்றும் 11 பெண்கள் உள்பட 90 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT