தென்காசி

மொபெட்டிலிருந்து தவறி விழுந்த பெண் பலி

DIN

ஆலங்குளம் அருகே மொபெட்டில் சென்ற பெண் தவறி விழுந்ததில் உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள அய்யனாா்குளத்தைச் சோ்ந்தவா் பரமசிவன். இவரது மனைவி சுப்புலட்சுமி(52). இருவரும் தனது மூன்றாவது மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக முக்கூடல் அருகே உள்ள அரசன்குளத்துக்கு வெள்ளிக்கிழமை மொபெட்டில் சென்றுகொண்டிருந்தனராம்.

மருதம்புத்தூா் அருகே சென்றுகொண்டிருந்தபோது, மொபெட்டில் பின்னால் இருந்த சுப்புலட்சுமி நிலைதடுமாறி சாலையில் விழுந்தாராம்.

இதனால் தலையில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT