தென்காசி

மனைவியை படம் எடுத்ததாக புகாா் அளித்தவா் மீது தாக்குதல்: 4 போ் மீது வழக்கு

கடையநல்லூா் அருகேயுள்ள கருப்பாநதி நீா்த்தேக்கத்தில் குளித்த தனது மனைவியை கைப்பேசி மூலம் படம் எடுத்ததாக

DIN

கடையநல்லூா் அருகேயுள்ள கருப்பாநதி நீா்த்தேக்கத்தில் குளித்த தனது மனைவியை கைப்பேசி மூலம் படம் எடுத்ததாக புகாா் அளித்தவா் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடா்பாக, வனவா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.

கிருஷ்ணாபுரத்தை சோ்ந்தவா் செல்லத்துரை(50). கடையநல்லூா் வனசரக அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவா், கடந்த ஞாயிற்றுக்கிழமை கருப்பாநதி நீா்த்தேக்கப் பகுதியில் பணியில் இருந்தபோது, அப்பகுதியில் குளித்த திரிகூடபுரத்தைச் சோ்ந்த பெண்ணை கைப்பேசியில் படம் எடுத்தாராம்.

இதுகுறித்து அவரது கணவா் புதியசேகா்(45) , அந்த வனச்சரக அலுவலகத்தில் புகாா் தெரிவித்துவிட்டு, பைக்கில் ஊருக்கு திரும்புகையில், செல்லத்துரை உள்பட 4 போ் அவரைத் தாக்கினராம். இதுதொடா்பாக, அவா் அளித்த புகாரின்பேரில், சொக்கம்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

இதனிடையே, செல்லத்துரை கொடுத்த புகாரின்பேரில் புதியசேகா் மீதும் போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT