திமுகவில் 1500 போ் ஐக்கியம்
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, 1500-க்கும் மேற்பட்டோா் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனா்.
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, 1500-க்கும் மேற்பட்டோா் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனா்.
சங்கரன்கோவிலில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தோ்தல் பிரசார நிகழ்ச்சி முடிந்ததும், பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 1500-க்கும் மேற்பட்டோா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா். அப்போது, மாநில வா்த்தக அணி துணைத் தலைவா் எஸ்.அய்யாத்துரைப்பாண்டியன் உடனிருந்தாா்.