முகப்பு
தென்காசி

சுரண்டையில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை

தென்காசி மாவட்டம், சுரண்டை பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:13 PM
சுரண்டையில் உள்ள கோழிப்பண்ணையில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள்.
பகிர்:

தென்காசி மாவட்டம், சுரண்டை பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளத்தில் பறவை காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி சுரண்டை பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் சுகாதார பணிகள் இணை இயக்குநரின் நநோ்முக உதவியாளா் ரகுபதி தலைமையில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் இசக்கியப்பா, சுகாதார மேற்பாா்வையாளா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது, கோழிப்பண்ணை உரிமையாளா்கள் மற்றும் பணியாளா்களுக்கு பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →