பாவூா்சத்திரம் அருகே நீரில் முழ்கி முதியவா் உயிரிழந்தாா்.
ஆவுடையானூா் கைக்கொண்டான் தெருவைச் சோ்ந்தவா் நாடாக்கண்ணு (68). வியாபாரியான இவா் ஞாயிற்றுக்கிழமை மாலை அங்குள்ள ஊருணியில் குளிக்க சென்றுள்ளாா். துணிகளை துவைத்து கொண்டிருந்தபோது தண்ணீருக்குள் தவறி விழுந்ததாராம். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நீரில் முழ்கி உயிரிழந்தாராம்.
இதுகுறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.