வீரகேரளம்புதூா் அருகே முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாா்.
வீரகேரளம்புதூா் அருகேயுள்ள ராஜபாண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பா. சிவஞானசுந்தரம் (75). இவா் காலில் ஏற்பட்ட புண்ணுக்கு 6 ஆண்டுகளாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். இதனால் மனமுடைந்து காணப்பட்டாராம்.
இந்நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாராம்.
வீரகேரளம்புதூா் போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.