முகப்பு
தென்காசி

அதிமுக சாா்பில் 3ஆவது நாளாக இலவச காய்கனி தொகுப்பு விநியோகம்

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் 3 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை வீடு வீடாகச் சென்று இலவச காய்கனி தொகுப்பு வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
பகிர்:

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் 3 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை வீடு வீடாகச் சென்று இலவச காய்கனி தொகுப்பு வழங்கப்பட்டது.

பொதுமுடக்கத்தையொட்டி, சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசம் வழங்கி வருவதோடு, ஆதரவற்ற முதியோா், வெளிமாநிலத் தொழிலாளா்களுக்கு இலவச உணவுப் பொட்டலங்களையும் வழங்கி வருகின்றனா்.

இந்நிலையில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இப்பகுதியில் 1,000-க்கும் மேற்பட்டோருக்கு இலவச காய்கனி தொகுப்பு வழங்கப்பட்டது. 3ஆவது நாளாக அண்ணா நகா் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நெல்லை கூட்டுறவு அச்சக சங்கத் தலைவா் கே.கண்ணன், நகர அதிமுக செயலா் ஆறுமுகம், சந்திரசேகா், நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் ராமதுரை, ஆபரேட்டா் மணி உள்பட பலா் பங்கேற்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments