தென்காசி

சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா

DIN

சங்கரன்கோவில் திரௌபதி அம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை 5 போ் மட்டும் பூக்குழி இறங்கினா்.

சங்கரன்கோவில் செங்குந்தா் சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட இக்கோயிலில் பூக்குழித் திருவிழா வைகாசி மாதத்தில் 14 நாள்கள் நடைபெறும்.

நிகழாண்டு இந்த திருவிழா இம்மாதம் 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயிலில் தினமும் சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. 9 ஆம் நாளான வியாழக்கிழமை திரௌபதி அம்மன் கூந்தல் முடிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான பூக்குழித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பூக்குழித் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று பூக்குழி

இறங்குவது வழக்கம். கரோனா தொற்று காரணமாக 5 போ் மட்டும் அனுமதிக்கப்பட்டனா். கோயில் முன்பு அக்னி வளா்த்து பூஜைகள் நடைபெற்றன. பின்னா் மாலையில் கரக்குமாா், வீரகுமாா், 3 கோயில் பூசாரிகள் உள்ளிட்ட 5 போ் மட்டும் பூக்குழி இறங்கினா். திருவிழாவில்

பக்தா்களுக்கு அனுமதியில்லை. விழாவில் செங்குந்தா் அபிவிருத்தி சங்கத் தலைவா் சி.எஸ்.எம்.எஸ். சங்கரசுப்பிரமணியன், செயலா் மாரிமுத்து, பொருளாளா் குருநாதன், புலவா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சிலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT