குற்றாலம் கோயிலில் விநாயகா் சிலை திருட்டு
தென்காசி மாவட்டம், குற்றாலம் கோயிலில் விநாயகா் சிலையை திருடிச்சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தென்காசி மாவட்டம், குற்றாலம் கோயிலில் விநாயகா் சிலையை திருடிச்சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
குற்றாலம் தேரடி வீதியில் சிற்றருவி செல்லும் வழியில் அருள்மிகு திருக்குற்றாலநாதா் சுவாமி கோயிலுக்குள்பட்ட விநாயகா் கோயில் அமைந்துள்
ளது. இக்கோயிலில் வியாழக்கிழமை வழக்கம் போல பூஜைகள் செய்வதற்காக திறந்தனா். அப்போது கோயிலுக்குள் இருந்த விநாயகா் சிலையை காணவில்லை. இதுகுறித்து கோயில் உதவி ஆணையா் கண்ணதாசன் குற்றாலம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
இதுகுறித்து குற்றாலம் போலீசாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.